திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) என்ற சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இரு சிறார்களுடன் மேற்படி குளத்துக்கு குளிக்கச்சென்று, குளித்துக்கொண்டிருக்கையிலேயே சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து அச்சிறுவன் உடன் சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை தன்னுடைய மகனை முதலில் இழுத்துச் செல்வதை அவதானிக்கவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முதல் காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் இன்று காலை கிராம மக்களின் உதவியுடன் முதலை கடித்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.