பசறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
காவல்துறை, வனத்துறை, வீதி , சுரங்கம், விவசாய சேவைகள், போக்குவரத்து சபை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, விளையாட்டு, மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் இக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
முதியோர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை, தூர இடங்களுக்கு சென்று சிரமத்தின் மத்தியில் முதியோர்கள் பெற்றுக்கொள்வதால், அவர்களுக்கான கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குமாறு பசறை பிரதேச செயலாளருக்கு செந்தில் தொண்டமான் இக்கூட்டத்தின்போது பணிப்புரை விடுத்தார் .
