ரிஷாட்டின் வீட்டுக்கு வேலைக்கு சென்ற மலையக சிறுமி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 16 வயதுடைய மலையக சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம பகுதியே இச்சிறுமியின் வாழ்விடம். 6 சகோதரர்களைக்கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவது பிள்ளையாக பிறந்துள்ளார். அப்பகுதியில் உள்ள தரகர் ஒருவர் ஊடாகவே கடந்த ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்குச்சென்றுள்ளார்.

Related Articles

Latest Articles