” தமிழ் முற்போக்கு கூட்டணியை (TPA) பிளக்க, ஆளுகின்ற இந்த அரசு விலை பேசி, வலை வீசுகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளக்கும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன்.
தமிழ் பேசும் இலங்கை சமூகமும் மன்னிக்காது என நம்புகிறேன்.
என் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து நண்பர்களும் எம்மோடு கரங்கோர்க்க வேண்டுகிறேன்..!”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.