யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர் .
மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிஸார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.