மைத்திரி அணிமீதான மொட்டு கட்சியின் தாக்குதல் ஓயவில்லை – இன்றும் விமர்சனக் கணை தொடுப்பு!

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தர்கள்தான் இன்று அக்கட்சியை வழிநடத்துகின்றனர்.” – என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர் இவ்வாறு, சுதந்திரக்கட்சியை விளாசித்தள்ளினார்.

” அரசு என்ற வகையில் நாம் சில திட்டங்களை முன்னெடுக்கையில் பின்னடைவு ஏற்படலாம். அவ்வாறு சர்ச்சைகள் உருவாகும்போது அதில் சந்தர்ப்பவாத அரசியலை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நடத்திவருகின்றது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

உரப்பிரச்சினையின்போது அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு தாமும் எதிர்ப்பு என சுதந்திரக்கட்சி ‘பல்டி’ அடித்தது. சிலவேளை இத்திட்டம் வெற்றியளித்திருந்தால் அதற்கு தான்தான் காரணம் என மைத்திரிபால சிறிசேன உரிமைகோரி இருப்பார்.

அரசுக்குள் இருந்துகொண்டு, சிறப்புரிமைகளை அனுபவித்தபடியே அவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களின் கொள்கை என்னவென்பது புரியவில்லை. ” – என்றார் .

Related Articles

Latest Articles