நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (16) சந்தித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்தியாவிற்கான இவ் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய கடன் வசதியை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் . எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
