யாழ். போதனா வைத்தியசாலைக்குள் காவலாளியைக் காயப்படுத்தியர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றது.

மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

35 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles