ரணிலே நாட்டை மீட்டவர்: அவரே தொடர்ந்து ஆள வேண்டும்!

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு இந்நாட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.

கொத்மலை பகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் தவலந்தென்ன நகரில் இன்று (14.07.2024) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சண்முகம் திருச்செல்வம் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், தேசிய பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனம் மூலம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் சென்றார் எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்று, ஜனாதிபதியாகி 2 கோடியே 20 லட்சம் மக்களை அவர் காப்பாற்றியுள்ளார். அதுதான் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமை, தலைமைத்துவம். இன்று நாட்டு மக்களின் பொதுத்தலைவராக அவர் மாறியுள்ளார். அன்று ஜனாதிபதி ரணிலை விமர்சித்தவர்கள்கூட இலங்கைக்கு ரணில்தான் வேண்டும் என கூறத்தொடங்கியுள்ளனர்.

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அவர் மீட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சில வன்முறையாளர்களால் சட்டம், ஒழுங்கு கையில் எடுக்கப்பட்டது. இதனால் நாட்டில் அராஜக நிலை ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலைநாட்டினார். இன்று அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது.

நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்காது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஆனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சவாலை ஏற்று, இன்று ஜனாதிபதி ரணில் சாதித்து காட்டியுள்ளார்.

எனவே, நாடு சிறந்த பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்து இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெறவேண்டும். மக்களும் அதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles