உள்ளாட்சிசபைத் தேர்தலில் இணைந்து களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணக்கத்தக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற இரு தரப்பு கலந்துரையாடலின்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
சின்னம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு இல்லை .
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச இருவரும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய பின்னர், சின்னம் தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது. பெரும்பாலும் அது பொது சின்னமாக இருக்கும் என அறியமுடிகின்றது.
