ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தம் இரத்து

இயலுமை இருந்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்குரிய சட்ட ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

22-05-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வாழ்க்கைச் செலவு மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய நாளாந்த ஊதியத்தை மதிப்பிடுமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளருக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கும் குறித்த சம்பளத்தை வழங்குவதற்கான திறனை தீர்மானிக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இயலுமை இருந்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட உள்ளன.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles