‘ வசந்த முதலிகே பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்யப்படவில்லை’

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படுத்தியமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.

“போராட்டங்களின்போது பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகேயின் கைதுடன் அரசைத் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவைத் தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திடக் கூடாது என்று மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  வசந்த முதலிகே பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்யப்படவில்லை. அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் உள்ளன. அவரைக் கைதுசெய்யும் உத்தரவை நீதிமன்றத்திடம் ஏற்கனவே பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சில தினங்ளுக்கு முன்னர் கொழும்பில் முறையற்ற விதத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் அண்மையில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு இடையில் தோற்றம் பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உண்டா  என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசுக்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம். அவர்கள் மூவரினதும் விவகாரம் தொடர்பில் நீதித்துறையே இறுதி முடிவு எடுக்கும். பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்யும்போது பயங்கரவாதத் தடைச் சட்டமும் பயன்படுத்தப்படும். இது புதிய விடயம் அல்ல” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles