வட கொரிய மக்கள் சிரமமான காலத்தைச் சமாளிக்கத் தயாராகுமாறு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரியாவின் தற்போதைய பொருளியல் நெருக்கடி 1990 களில் நிலவிய கடுமையான பஞ்சத்தை விட மோசமாய் இருப்பதாகத் கிம் கூறினார்.
கொரோனா கிருமிப்பரவலை முறியடிப்பதற்காக வட கொரியா தனது எல்லைகளை மூடியது. அதனால் வர்த்தகம் முடங்கிப்போனது.
வட கொரியா மீதான அனைத்துலகத் தடைகளும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
வட கொரியா கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக மனித உரிமைக்குழுக்கள் எச்சரித்துள்ளன.










