வடக்கில் கன மழை – 26 பாடசாலைகள் இயங்கவில்லை!

வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை.

வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை என்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடக்கில் தொடர்ந்தும் அதிக மழை பொழிவதால் நாளை மேலும் பல பாடசாலைகள் இயங்க முடியாமல் பாதிப்படையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles