வடக்கு, கிழக்கு போராட்டத்துக்கு அருட்தந்தை சக்திவேல் ஆதரவு

நினைவேந்தல் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அறவழியிலான போராட்டங்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் என்று அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் தடுக்க முற்படுவது மனித உரிமை மீறலாகும் என மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதென்பது மக்களுக்கான உரிமையாகும். அந்த உரிமையை எவரும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் இங்கு தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதற்கு இதுமற்றுமொரு சான்றாகும். எனவே, நினைவேந்தல் உரிமையை வெல்வதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம்.
தியாகி திலீபன் என்பவர் காந்தியவழியில் போராடி மடிந்தவர் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles