வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா!

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கடந்த 14 ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து  அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 10 பேருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் 480 பேருக்கு என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  21 பெண்களுக்கும், 7 ஆண்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles