வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை (08) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (09) பிற்பகல் 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஹேகித்தை, பள்ளியாவத்தை, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ மருதானை வீதி, எலகந்த மற்றும் ஹெந்தலை வீதி ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேகித்தை வீதியில் நீர் விநியோகக் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
