பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களை கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய முன்னணியொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்துடன் தாம் இணைந்து செயற்படப் போவதில்லையென்றும் அரசாங்கத்தின் சில பதவிகளுக்காக எதிர்க்கட்சியில் சிலருக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் எவ்வாறெனினும் தமது தரப்பினருக்கு அதற்கான அழைப்பு எதுவும் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைத்தாலும் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சி கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லையா? என சிலர் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். எனினும் தாம் எதிர்க்கட்சியிலேயே உள்ளதாகவும் ஆளும்கட்சி கூட்டத்துக்கு சமுகமளிப்பதில்லையென்றும் தாம் பதிலளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.










