வெளிநாட்டு கள்ள நோட்டுகளுடன் கந்தளாயில் இருவர் கைது!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க கள்ள நோட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (23) கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 48 , 49 வயதுடைய இருவரே கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அமெரிக்கா டொலர்கள் இலங்கை பெறுமதியில் சுமார் 68 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles