வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம்..!

நாட்டில்  நிலவிவரும் சீரற்ற  காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த வகையில் நாட்டில் இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியும் தடைபட்டுள்ளதுடன் வீதியின் சுமார் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

இதனால் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Related Articles

Latest Articles