அதிகரித்த மின்கட்டணம் – இரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

பாணந்துறை ஹொரன வீதியில் நேற்றையதினம் இரவு மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக கண்டியிலும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles