” அன்று இந்தியா பலவந்தமாக பருப்பு போட்டதுபோல இன்று பலவந்தமாக இலங்கையில் உரத்தை இறக்குவதற்கு சீனா முற்படுகின்றது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சேதன பசளையை, தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் நிராகரித்துள்ளது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட உரத்தை பலவந்தமாக நாட்டுக்குள் இறக்க முற்படுவது தவறு. அதேபோல மூன்றாம் தரப்பொன்றை நாடுவதும் தவறு.
நிராகரிக்கப்பட்டதை எவ்வாறு மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரமுடியும். சீனாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ அவ்வாறு செய்யமுடியாது. இந்தியா அன்று பருப்புபோட்டதுபோலவே இன்று பலவந்தமாக உரத்தை இறக்குவதற்கு சீனா முற்படுகின்றது. இது இலங்கையின் இறையான்மையுடன் தொடர்புபட்ட விடயமாகும்.” – என்றார்.