‘அரசியலமைப்பு என்பது தேவ வாக்கியம் அல்ல’

” இலங்கையின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு சோஷலிசமே'” என்று முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

” ஜனநாயகம் மக்களின் இறையாண்மை சக்தியாலேயே வலுவாகின்றது. அரசியலமைப்பு சட்டங்கள் தேவவசனங்களால் உருவான ஒன்றல்ல. அது சமூகத்தின் உருவாக்கமாகும். மக்களின் நன்மை கருதி அதனை மாற்ற முடியும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆட்சியில் தங்கியிருப்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்பை உருவாக்கி உள்ளார்கள். அவற்றை சட்டமாகவும் மாற்றியுள்ளார்கள். அதனால் அதைவிட விரிவான அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதற்காக மக்களின் தலையீடு நாட்டின் சட்டங்களாக மாற வேண்டும். அது முற்றிலும் ஜனநாயக ரீதியாக காணப்படுவதோடு அது நாட்டின் சட்டமாகவும் மாற வேண்டும்.” – எனவும் குமார் குணரத்னம் வலியுறுத்தினார்.

” முன்னிலை சோசலிச கட்சியின் நீண்ட கால இலக்கு இலங்கையில் சோஷலிசத்தை உருவாக்குவதாகும். நீண்ட காலமாக நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு சோஷலிச சமூக முறையிலேயே காணப்படுகின்றது. இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு சோஷலிசமே. மக்களை இணைத்து மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை உருவாகும் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மக்களுக்கான அரசியலமைப்பு ஒன்றின் தேவையை இன்று நாம் உணர்கின்றோம். இறுதி வெற்றி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு உருவாகும் தற்காலிக அரசுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு மிக விரைவில் சீர்திருத்தங்களை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பினால் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் கருத்து எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஜனநாயக முறையில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles