அரசுக்கு ஒரு மாதம் கெடு – நாளை கொழும்பு சுற்றிவளைப்பு!

அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

” ஜனாதிபதி இருக்கும் இடத்தை தேடிச்செல்வோம். ஒரு மாதம் அவகாசம் வழங்குவோம். அதற்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் வலுவடையும். அரபு வசந்தத்தையும் விஞ்சும் வகையில் எமது நடவடிக்கை அமையும். ” – என்றும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

கொரோனாவால் அல்ல, அரசின் செயற்பாடுகளால்தான் நாடு இந்நிலைமையை எதிர்கொண்டுள்ளது எனவும் ஹரின் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles