‘அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை’ – தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு!

அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாவது,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் உரிய முடிவை எடுக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீம், ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனரா என்ற சந்தேகம் எழும். அதேபோல இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles