ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் – அமைச்சர் தினேஷ் உறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் – என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் பலசுற்று பேச்சுகளை நடத்தியிருந்தார். நிச்சயம் அதனை பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles