” ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சில தொழிற்சங்கங்கள் மார்தட்டினாலும் இன்னும் அது சரிவரவில்லை. கூட்டு ஒப்பந்தம், சம்பள உயர்வு ஆகிய இரண்டையும் இழக்கவேண்டிய அபாய நிலையும் இருக்கின்றது.
கம்பனிகளுடன் இணைந்து அரசாங்கம் நாடகமாடுகின்றது. அரசாங்கத்தின்கீழ் 3 பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் ஊடாகவேனும் ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கலாம். எனவே, பெருந்தோட்டத்துறை தொடர்பில் பொதுவானதொரு பொறிமுறை அவசியம்.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.