இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்! சார்க் நாடுகள் ஜொலிக்க ஒரு சிறந்த வாய்ப்பு!

இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு ஜி 20 நாடுகளின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசிய பிராந்தியமானது அந்தத் தலைமைத்துவத்தின் கீழ் பயன்களை அடையவுள்ளது.

ஜி-20 தலைமைப் பொறுப்பை 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி இந்தியா ஏற்றது. 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை கூட்டவுள்ளது.

பலதரப்பு இராஜதந்திரத்தின் இந்தியாவின் மூலோபாயம் அதன் ஜி-20, ஜனாதிபதியின் போது சோதனைக்கு உட்படுத்தப்படும். உக்ரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகளில் பல புருவங்களை உயர்த்த வைத்தது. உக்ரெய்ன் – ரஷ்ய போரின் போது உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து இந்தியா இலகுவாக மீண்டது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு ஜி-20 அமைப்பின் பணிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி-20 ஜனாதிபதி பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன், ஷ்ரிங்லா ஆகியோர் பேசியிருந்தனர்.

சர்வதேச நிதி ஒத்துழைப்பு, கடன் மறுசீரமைப்புக்கான ஜி-20 அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜி-20 இன் தலைமைத்துவம் வகிக்கும் இந்தியா!

வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் இந்தியாவிற்கு முக்கிய பங்காற்ற முடியும். பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், ஆற்றல், சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, உரங்கள், எரிபொருள் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து இந்தியா கவனம் செலுத்தும். இதன்மூலம் சார்க் நாடுகள் இந்தத் துறைகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், மேம்படவும் பேருதவியாக இருக்கும்.

2021 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சுகாதார கவரேஜ் கண்காணிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், தெற்காசிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த விடயத்தில் இந்தியா தற்போது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், சார்க் நாடுகளைப் பாதித்துள்ள விடங்கள் குறித்தும் தீர்வுகளைக் காண்பதற்கு இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் பேருதவியாக இருக்கும். சர்வதேச நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, பாலினம், காலநிலை, சுற்றுச்சூழல் ஆகியவை மிகவும் நெருக்கமான பிரச்சினைகள் ஆகும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்பொழுதும் அதன் அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையை முன்னிலைப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் நலனை கருத்திக் கொண்டு, நாம் வளர்ச்சியடைவோம் என்ற கொள்கையில் இந்தியாவின் முன்னெடுப்புக்கள் இருப்பதாக இந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன் ஜி-20 தலைமைத்துவத்தின் போது, இந்தியா, உலகளாவிய தலைவராக, மற்ற வளரும் நாடுகளில், கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கலப்பு கற்றல் மற்றும் ஒத்துழைப்புடன் உருவாக்க உதவ முடியும்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் சம்பந்தமான விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு டிசம்பர் 5-ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஜி20 தலைமைத்துவம், ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியது என்றும், உலகம் முழுவதுக்கும் இந்தியாவின் வலிமையை எடுத்துரைப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு இது என்றும் பிரதமர் கூறினார். இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் திறனை மேலும் அதிகரிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஜி20-இன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதில் சர்வதேச தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோரினார். வழக்கமான பெரிய பெருநகரங்களைக் கடந்து இந்தியாவின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவமும் வெளிப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

இந்தியாவின் ஜி20 தலைமையின் போது நம் நாட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜி20 கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் சாத்திய கூறுகள் பற்றி விளக்கினார்.

ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது சார்க் நாடுகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமையும். அந்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு சார்க் நாடுகள் முயற்சி செய்யவேண்டும். அதனூடாக வீழ்ச்சியடைந்து இருக்கும் தெற்காசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

குறிப்பாக சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை, இந்தியாவுக்கு அண்மையில் இருக்கும் நாடு என்பதனால் ஜி-20 மாநாட்டின் ஊடான வரபிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles