இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலைவரப்படி ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதேவேளை, உலகளவில் 7 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்து 327 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles