“இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு”

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், நல்லை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை யாழ்ப்பாணத்தில் அவரது ஆலயத்தில் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இலங்கையில் இந்து சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

1. பல நாட்களாக கட்டுமானப்பணிகள் முடிவடையாமல் இருக்கும் கோவில்களுக்கு நிதி உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தல்.

2. அனைத்து கோயில்களிலும் இந்து அறநெறி வகுப்புகளைத் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தல்.

3. மத மாற்றத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுகளை வழங்க ஏற்பாடு செய்தல்.

4. வடக்கு மற்றும் மலையகங்களுக்கு இடையிலான மத யாத்திரைகளை வளர்ப்பதற்கான இருதரப்பு திட்டங்களை உருவாக்குதல்.

ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles