நாட்டில் பல பகுதிகளில் இன்றும் அடை மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இதனால சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 8 மாவட்டங்களில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
