நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 479 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர். 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41 ஆயிரத்து 977 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் 65 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.