நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
50 மற்றும் 43 வயதுகளுடைய இரு பெண்களும், 78 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 611 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 652 பேர் குணமடைந்துள்ளனர்.