இன்று மாத்திரம் 878 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 878 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரத்து 304 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 21 ஆயிரத்து  861  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles