தமிழ், சிங்களப் புத்தாண்டு வரவுள்ள நிலையில், இரத்தினபுரி நகரம் மற்றும் இப்பகுதியின் தோட்டப் பகுதிகளில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெருக்கடிகளால் தோட்டப் பகுதி மக்கள் அதே இடங்களிலே பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலர்,பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பதாக,மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இப்பகுதியில் இவ்வாறு விற்கப்படும் பொருட்களில் அதிகமானவை தரங் குறைந்தவைகளாகவும் உள்ளன. மேலும் பழுதடைந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இன்னும் சிலர், நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் பொது சுகாதார விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதன் மூலம் இந்நிலைமைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
