-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை –
TRI, சென் ஜோக்கிம் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.
சென் ஜோக்கிம் தோட்டத்தை சேர்ந்த கொவிட் -19 நோய்த் தோற்றலர்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு சென் ஜோக்கிம் இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்போது இ.தொ.கா இளைஞர் அணி இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் வினோதன் செல்லதுரை, அமைப்பாளர்களான அபிலாஷ் சௌந்தர்ராஜன் மற்றும் சுதர்சன் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் முன் வந்து மக்களுக்கு உதவி செய்யும் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு சென் ஜோக்கிம் தோட்ட மக்கள் நன்றி தெரிவித்ததாக ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.