இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் கொரோனா

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான பாராளுமன்ற உறுப்பனர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா தொற்றையடுத்து, எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடாளுமன்றத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles