இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பீரஸ் உள்ளிட்டவர்களையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
