இரு தோட்டங்களில் குளவிக்கொட்டு – 18 தொழிலாளர்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குளவிக்கொட்டு தாக்குதல்களில் 10 பெண் தொழிலாளர்கள் உட்பட 18 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இன்று குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டனர். அறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அறுவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியெறியுள்ளனர்.

இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles