குடும்பப் பிணக்குகள் வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை நேற்று பட்டப்பகலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் புறநகரில் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக் கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
உயிரிழந்த அனைவரும் இலங்கையுடன் தொடர்புடைய தமிழர்கள் எனத்தெரிகின்றது. நேற்றுப் பகல் நிகழ்ந்த இந்தக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:-
பாரிஸ் புறநகரான நுவாஸி – லூ -செக் கில் வீடொன்றில் உயிரிழந்தவர்க ளது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
அவரது பிடியில் இருந்து தப்பியோடியஇளைஞர் ஒருவர் அருகேயுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்துப்பொலிஸாரும் அவசர சேவையினரும்அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின்கதவை உடைத்து உள் நுழைந்த பொலிஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஐவர்இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக்காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியநபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகின்றது.
அவருக்கு அருகேகத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.தேசிய மற்றும் நகரப் பொலிஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாள்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப்பட்டுள்ளன.
பக்கத்துப் பக்கத்தில் இருந்த – உறவினர்களான – இரு குடும்பத்தவர்களுக் கிடை யிலான பிணக்கே விபரீதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.