இலங்கையர்கள் ஐவர் படுகொலை! பிரான்ஸில் பயங்கரம்!!

குடும்பப் பிணக்குகள் வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை நேற்று பட்டப்பகலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் புறநகரில் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக் கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

உயிரிழந்த அனைவரும் இலங்கையுடன் தொடர்புடைய தமிழர்கள் எனத்தெரிகின்றது. நேற்றுப் பகல் நிகழ்ந்த இந்தக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:-

பாரிஸ் புறநகரான நுவாஸி – லூ -செக் கில் வீடொன்றில் உயிரிழந்தவர்க ளது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

அவரது பிடியில் இருந்து தப்பியோடியஇளைஞர் ஒருவர் அருகேயுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்துப்பொலிஸாரும் அவசர சேவையினரும்அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின்கதவை உடைத்து உள் நுழைந்த பொலிஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஐவர்இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக்காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியநபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகின்றது.

அவருக்கு அருகேகத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.தேசிய மற்றும் நகரப் பொலிஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாள்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப்பட்டுள்ளன.

பக்கத்துப் பக்கத்தில் இருந்த – உறவினர்களான – இரு குடும்பத்தவர்களுக் கிடை யிலான பிணக்கே விபரீதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles