கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,016 ஆக அதிகரித்துள்ளது.
237 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 6 ஆயிரத்து 142 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.