இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகப் பதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தின் ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே தேரர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.