இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான நாளாந்த விமான சேவையை மார்ச் மாத இறுதியில் இருந்து தாய்லாந்து இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இணை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.










