இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.
சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி ஒருவர் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.
இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கும் எனவும், இஸ்ரேல்மீது ஏவுகணை தாக்குதல் அல்லது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள தமது நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறத்தில் ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது.
சிலவேளை ஈரான் தாக்குதலை நடத்தினால் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.