கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளும், புலமைப் பரிசில் பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
”கம்பஹா மாவட்டத்தில் பரீட்சை எழுதும் மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். பரீட்சை நிலையங்கள் மிகக் கவனமாக கண்காணிக்கப்படும். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், வெளி மாவட்டங்களில் இருந்து கம்பஹா மாவட்டத்திற்கு பரீட்சை எழுத வரும் மாணவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். அத்துடன், பரீட்சை நிலையங்கள் மிகக் கவனமாக தூய்மைப்படுத்தப்படும். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்வதற்கான நடவ க்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் 11ஆம் திகதி 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.