நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு செப்டம்பர் 06 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஊரடங்கை நீடிக்குமாறு பல தரப்புகளும் வலியுறுத்திவந்தன. இந்நிலையிலேயே 13 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.