ஊரடங்கு உத்தரவைமீறிய 513 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைமீறிய 125 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டி நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கைமீறிய 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அத்துடன், 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ன.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளையும், அரசாங்கத்தின் அறிவித்தல்களையும் முறையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles