கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த ஊவா மாகாணத்தின் 42 ஆசிரியர்களுக்கு நாளை நியமனம் கிடைக்கப்பெற உள்ளது.
வெளிமாவட்டத்தில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருந்த இந்நிலையில் அந்த விடயத்தில் தலையீடு செய்து கல்வி அமைச்சுடன் நேரடியான கலந்துரையாடல்கள் நடாத்தி குறித்த ஆசிரியர்களும் ஊவா மாகாணத்தில் அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே நியமனத்தை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்திருந்தார்.
செந்தில் தொண்டமானின் இந்த பணி நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களை மன உளைச்சலில் இருந்து மீட்டதுடன், அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் இருந்துக்கொண்டு பணியாற்றும் சூழ்நிலையும் உருவானதால் ஊவா கல்வி சமூகம் செந்தில் தொண்டமானின் இந்த செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளது.