எக்காரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது!

“எந்தகாரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது.இடர்நிலைமை காணப்படின் அந்த பிரதேசத்தில் பிரிதொரு நாளில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமுண்டு. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் வாக்களிப்பதற்கு தயாராகவேண்டும்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிடுமாறு சுகாதார தரப்பிடம் நாம் கோரியுள்ளோம். ” என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles