ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் என்பவரால் இது தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் வந்துவிட்டு, பின்னர் ஆளுங்கட்சி பக்கம் டயானா கமகே தாவினார். அவர் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










